- அமைச்சர்
- ஏ.சக்ரபாணி
- திண்டுக்கல்
- முதல் அமைச்சர்
- பெரரிநகர் அண்ணா
- திண்டுக்கல் மாவட்டம்
- உணவு மற்றும் ஊட்டச்சத்து
- சக்ரபாணி
- திண்டுக்கல் டிஎம்கே கிழக்கு மேற்கு மாவட்டம்
- திராவிட மாதிரி ஊராட்சி
திண்டுக்கல், பிப். 4: முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் நேற்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. திண்டுக்கல் திமுக கிழக்கு மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடந்த நிகழ்விற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். மணிக்கூண்டுவில் இருந்து கட்சியினர் அமைதி பேரணியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று ஜிஹெச் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் எம்பி வேலுச்சாமி, அவை தலைவர் காமாட்சி, கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், மார்க்ரேட் மேரி, நகர செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, ஒன்றிய தலைவர் ராஜா, மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, அவை தலைவர் மோகன் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
*திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்விற்கு அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமை வகித்தார். மாநிராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். ஜிஹெச் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஜெ.பேரவை செயலாளர் பாரதி முருகன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
*திண்டுக்கல்லில் மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராகவன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மோகன், மாநகராட்சி கவுன்சிலர் காயத்ரி, மாநில விவசாய அணி துணை செயலாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திராவிட மாடல் அரசின் சாதனைகளால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் ட்டன்சத்திரத்தில் அண்ணா படத்திற்கு மரியாதை செலுத்திய பின் அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு appeared first on Dinakaran.